ஷாட்ஸ்

இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு!

இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

திமுக-காங். கூட்டணியை சிதைக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு ஒருபோதும் பலிக்காது: செல்வப்பெருந்தகை

திமுக-காங். கூட்டணியை சிதைக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு ஒருபோதும் பலிக்காது என தமிழக காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் 'தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ராகுல், கனிமொழி ஆலோசனை நல்ல சந்திப்பாக அமைந்திருந்தது. பிப்ரவரி இறுதியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க கார்கே, ராகுல், பிரியங்கா தமிழ்நாடு வர உள்ளார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட கூட்டணி' எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

வெள்ளிங்கிரி மலைக்கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி!!

வெள்ளிங்கிரி மலைக்கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளுக்கு சாதுக்கள் பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது!!

 நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒன்றிய அரசு அறிவித்த கூடுதல் கலால் வரி விதிப்பால் பிப்ரவரி 1-ல் இருந்து ரூ.2 முதல் ரூ.8.50 வரை சிகரெட்டின் அளவை பொறுத்து உயர்கிறது. 

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு!!

விமான விபத்தில் நேற்று உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித்பவாரின் (66) இறுதிச் சடங்கு இன்று காலை 11 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மராட்டிய முதலமைச்சர் பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல். அவரது மறைவை அடுத்து மராட்டிய மாநிலம் முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

வரதட்சணைக் கொடுமை மரணங்களுக்கான தண்டனைக்கு ஈடாக, ஆசிட் வீச்சு குற்றத்திலும் தண்டனை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

வரதட்சணைக் கொடுமை மரணங்களுக்கான தண்டனைக்கு ஈடாக, ஆசிட் வீச்சு குற்றத்திலும் தண்டனை வழங்க நாடாளுமன்றம், மாநில சட்ட மன்றங்களின் தலையீடு தேவை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆசிட் வீச்சு சம்பவங்கள், வழக்கின் நிலை, பாதிக்கப்பட்டோரின் கல்வி, வேலைவாய்ப்பு நிலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் உத்தரவு அளித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15,74,351 பேர் படிவம் 6-ஐ விண்ணப்பித்துள்ளனர்!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15,74,351 பேர் படிவம் 6-ஐ விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 96,732 பேர் படிவம் 7-ஐ விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். மூலம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் 3 நாட்களில் நிறைவடைகிறது. நீக்கப்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான அவகாசம் ஜன.30 தேதியுடன் நிறைவடைகிறது.

இனி திமுக எப்போதும் ஆட்சிக்கு வராது- எடப்பாடி பழனிசாமி

திமுக இனி மீண்டும் ஆட்சிக்கு வராது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “2026 தேர்தல் திமுகவுக்கு இறுதித் தேர்தல். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. 4ல் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் போராடிக் கொண்டிருக்கும் அளவுக்கு மக்கள் வெறுப்பை வெறுப்பை திமுக சம்பாதித்துள்ளது. இந்த தேர்தலோடு திமுகவுக்கு மக்கள் விடை கொடுத்துவிடுவார்கள்” என்றார்.

44 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

77வது குடியரசு தினத்தை ஒட்டி 44 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருது பெறுவோருக்கு தலா பத்து கிராம் தங்கப் பதக்கம், ரூ.25,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும். மெச்சத்தக்க நுண்ணறிவு, மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் 43 காவல் அதிகாரிகள், தனிப்பிரிவு உதவியாளருக்கு பதக்கம் வழங்கப்படும். 44 பேருக்கும் வேறு ஒரு நாளில் நடைபெறும் விழாவில் பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தாளமுத்து-நடராசன் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு எழும்பூரில் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு நாள் பயணமாக ஜன.28ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஜன. 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சின்னம் கோரி த.வெ.க. விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது: எடப்பாடி பழனிசாமி

தங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பெரிய மாற்றத்துக்கான கூட்டமாக நாளைய பொதுக்கூட்டம் அமையும். என்.டி.ஏ. கூட்டணியின் வெற்றிக்கு பொதுக்கூட்டம் அச்சாணியாக அமையும். பியூஷ் கோயல் எனது இல்லத்துக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

எடப்பாடி பழனிசாமி என்னுடைய பழைய நண்பர் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி அளித்துள்ளர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.167.9 கோடியில் மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். இராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை : திமுகவில் இணைந்த வைத்திலிங்கம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் செயல்பாடு சிறந்ததாக இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம், "முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது,"இவ்வாறு தெரிவித்தார்.

அதிமுக, பாஜக கூட்டணியில் அமமுக இணைவதாக டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மக்கள் விரும்பு நல்லாட்சியை உருவாக்க தேசிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்த நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "எங்களுக்குள் பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போக மாட்டார்கள். ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பியூஷ் கோயலை சந்திக்க நட்சத்திர விடுதிக்கு டி.டி.வி. தினகரன் செல்கிறார்.

தென் மாநில முதலமைச்சர்களுக்கு சித்தராமையா விரைவில் அழைப்பு!!

தென் மாநிலங்களின் முதல்வர்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். தொகுதி மறுவரையறை மற்றும் தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆலோசனை நடத்த தென் மாநில முதலமைச்சர்களுக்கு சித்தராமையா விரைவில் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம். திமுகவில் இணைவதற்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைத்திலிங்கம், ஒ.பி.எஸ். ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது ரயில்வே வாரியம்!!!

பூவிருந்தவல்லி -வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது. ரயில்வே வாரியம் ஒப்புதலை அடுத்து பிப்ரவரி முதல் பூவிருந்தவல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது.15.8 கி.மீ நீளமுள்ள இந்த மெட்ரோ வழித்தடத்தில் சமீபத்தில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகராமக நடந்த நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.